தமிழகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாக கருதப்படும் ஊட்டி மலை ரயில் பயணத்தில் வார இறுதி, பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் எக்கச்சக்கமானோர் வருவார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் (நவ.12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலருக்கும் நாளை (நவ.11) முதல் நவ.13 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மலை ரயில் பயணத்தில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மலை ரயில் வழித்தட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து வருகிறது. எனவே இன்று (நவ.10) ,முதல் நவ.16ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பு பல சுற்றுலா பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை., குஷியான மாணவர்கள்!!!