இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விடுமுறை காலங்களில் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வர ஆர்வமாக உள்ளனர். அதிலும் மேட்டுப்பாளையம் to ஊட்டி செல்லும் மலை ரயில் பயணம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக இந்த ரயில் வழித்தடத்தில் பாறைகள், மரங்கள் விழுந்து இருந்ததால், நவம்பர் 10ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று (நவ.17) முதல் மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தனர். இருந்தாலும் இதுவரை பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் நாளை மறுநாள் (நவ.19) முதல் ஊட்டி மலை ரயில் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., விரைவில் 50% அகவிலைப்படி உயரும்.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!