முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஊட்டி மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார்,

ஊட்டி:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களில் கட்டுப்பாடு அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் வேகமாக வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மோடியின் தாயார்- வைரலாகும் ட்வீட்!!

மேலும் தற்போதைய காலங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதை மறந்து வருகின்றனர். தற்போது இதனை தடுக்கும் வகையில் ஊட்டி மாவட்ட ஆட்சியர் ஓர் அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். தற்போது இதுகுறித்து பேசிய அவர், கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இனி மாஸ்கில்லாமல் வெளியில் திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். எனவே மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here