கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது கிடைத்ததை முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்துள்ளார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்:
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டது. மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும்; இவ்விருது முதல் முறையாக நம் தமிழகத்தில் இருக்கும் ஒருவருக்கு வழக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து; கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு சென்ற வைரமுத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து,
அணைகடந்த வெள்ளம்போல் ‘என் காதலா’ என்ற என் ஆறாம் பாட்டுக்கு நீங்கள் வழங்கிவரும் வரவேற்பால் என் மனசுக்குள் மயிலிறகு ஊர்கிறது.
என்று பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!