தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் தன்னுடன் விளையாண்ட சிறுமி வெற்றி பெற்றதை பொறுக்கமுடியாத சிறுவன் அவரை கற்களால் தாக்கி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு விபரீதம்:
கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் காரணத்தால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகள் அனைவரும் ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாட அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த காரணத்தால் பல விபரீத சம்பவங்கள் நடந்து வருகின்றனர். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து தன்னுடன் விளையாண்ட சிறுமி வெற்றி பெற்றதை பொறுக்க முடியாத சிறுவன் அவரை கற்களால் அடித்து அவரை கொலை செய்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
தொடர் வெற்றி:
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்ட லசூடியா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஆன்லைன் விளையாட்டான “ப்ரி பயர்” விளையாடுவதை தனது வழக்கமாக கொண்டுள்ளார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சிறுமியும் விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடி கொண்டு இருக்கும் போது அந்த சிறுமி தொடர்ந்து வெற்றி அடைந்து வந்துள்ளார்.
விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு எப்படி வாங்குவது??
இதனால் கோபம் அடைந்த சிறுவன் அவரை சரமாரியாக கற்களால் தாக்கி உள்ளார். இதனால் நிதானம் இழந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெற்றோர்கள் தான் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்திவிட்டு சென்றனர்.