கள்ளக்குறிச்சி சின்ன சேலத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிர் இழந்ததை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. இருப்பினும் அப்பள்ளியில் படித்த மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது கோரி பள்ளித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகர் புற்று நோயால் திடீர் மறைவு – சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்!!
ஆன்லைன் வகுப்பு:
சின்ன சேலத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13 அன்று பள்ளி விடுதியில் உள்ள 3வது மாடியில் இருந்து குதித்து ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியது. இந்நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மாணவர் அமைப்பினரும் உறவினர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தால் அப்பள்ளியில் பயின்ற 4500 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதனை தொடர்ந்து அந்த மாணவர்களை வேற ஒரு பள்ளியில் சேர்த்து படிப்பதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மேலும் எரிந்து போன சான்றிதழ் பதிலாக உடனே மாற்று சான்றிதழ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சேவைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியாக ஒரு ஸ்பெஷல் DEO போட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்