நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட கேம் விளையாடி பலரும் பணத்தை இழந்த காரணத்தால் தற்கொலை செய்து உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட கேம் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை வகுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் வெற்றி பெற்ற தொகையில் 30 சதவீதம் TDS வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். உதாரணமாக ரூ.30,000 வரை வெற்றி பெற்றால் ரூ.10,000 வரை TDS வரி செலுத்த வேண்டி வரும். இப்படி அதிக அளவில் வரி செலுத்த வேண்டியுள்ளதால் பலரும் ஆன்லைன் சூதாட்ட கேமில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.