தற்போதைய இளைஞர்கள் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இரண்டு வருடங்கள் இந்த தடையை நீடிக்க விடாமல் சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பு சார்பாக தடையை ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு தொடரப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4% இல்லை 8%…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், குட்கா பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை ஒன்றை வெளியிட தமிழக அரசாங்கத்திற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வாங்க, விற்க, சேமிக்க மற்றும் தயாரிப்பதற்கு ஓராண்டு காலம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஆணையை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.