மார்ச் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 30 ரூபாய்க்கு 1 லிட்டர் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என அதைத் தயாரித்த மூலிகை பெட்ரோல் ராமர் தெரிவித்து உள்ளார்.
தொழிற்சாலை தயார்..!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் தன்னுடைய மூலிகை பெட்ரோலை பதிவு செய்து ஜனவரி 29 முதல் சென்னையில் விற்பனையை துவங்கி உள்ளார். மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி – நாகர்கோவில் இடைப்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு 15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 20, டீசல் ரூ. 24க்கு விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளேன் என அவர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |