தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள்:
தமிழகத்தில் கொரோனாவின் முதல் அலையை விட கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்ததால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் இரவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பணிகளுக்கு மட்டுமே இரவில் அனுமதி என்றும் மாநில/மாவட்ட இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு தடை என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு சார்பில் இயக்கப்படும் விரைவு பேருந்து இன்று முதல் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் இயல்பாக இயங்கி வரும் தனியார் ஆம்னி பஸ் சேவைக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். தற்போது இதுகுறித்து பேசிய ஆம்னி பேருந்து சங்கத்தை சேர்ந்த ஜெயம்பாண்டியன் கூறுகையில் பொதுவாக ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வரும்.
கொரோனா தடுப்பூசி வீணாக்குவதில் தமிழகத்திற்கு முதலிடம் – ஆர்டிஐ அதிரடி அறிக்கை!!
ஆனால் கொரோனா தொற்று காரணமாக பகலில் இயக்க அரசு அனுமதித்தது. இந்நிலையில் கொரோனா தோற்ற அதிகமாக பரவும் நிலை இருப்பதால் ஆம்னி பேருந்துகள் சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நாளை முதல் யாரும் இயக்க வேண்டாம் என்றும் இந்த தீர்மானம் செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.