மிரட்டும் ஓமைக்ரான்… பொது போக்குவரத்துக்கு வந்த புதிய சிக்கல் – நொந்து போன பயணிகள்!!

0

தமிழகத்தில் பொது போக்குவரத்தில் 50% இருக்கைகளுடன் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள இந்த சூழலில், இது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

முன்பதிவு நிறுத்தம் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. 3ம் அலை தொடங்கி விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்மையில் எச்சரித்தார். இதையடுத்து, ஜனவரி 6ஆம் தேதியான  இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பொது போக்குவரத்தில் 50% இருக்கைகளுடன் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், வெளியூர்களில் இருந்து அதிகமான நபர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 16-ம் தேதி அரசு விரைவு பேருந்துக்கான முன்பதிவு  நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.9 ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் காரணமாக பேருந்து இயங்காது என்பதால், அன்று முன்பதிவு செய்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here