ஓமைக்ரான் பாதித்தவர்களுக்கு இந்த மருந்துகள் மட்டும் போதும் – டெல்லி மருத்துவர்கள் விளக்கம்!!

0

தற்போது பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மல்டி வைட்டமின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் மட்டுமே தற்போது தேவைப்படுவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மாத்திரைகள் போதும் :

உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில் இந்த வைரஸ் இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை 60க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிட்டத்தட்ட 40 நபர்களுக்கு மேல் அங்குள்ள, லோக் நாயக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று குறித்து விளக்கம் அளித்த அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், 90% நபர்களில் ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதாகவும், மற்றவர்கள் சாதாரணமாகவே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவர்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் மட்டுமே தற்போது தேவைப்படுவதாகவும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here