ஓமைக்ரான் அச்சம்… இந்தியாவில் விரைவில் பொது முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை!!

0
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு அதிரடி முடிவு!!
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், நாடு தழுவிய பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்த தீவிர ஆலோசனையில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விரைவில் பொது முடக்கம்:

உலகம் முழுவதும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவி உள்ளது. இதனால், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பல கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு நாளை முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போது, இந்தியாவில் இதுவரை 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிராவில் 108, டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, கேரளாவில் 37, தமிழகத்தில் 34, கர்நாடகாவில் 31, ராஜஸ்தானில் 22 பேர் என பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here