தமிழ்நாடு அரசு கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தேசிய அளவிலான புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ஒரு நிலைப்பு தன்மையுடன் கிடைக்க பெறாததால், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த கோரி CPS ஒழிப்பு இயக்கத்தை மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த இயக்கமானது, கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி, உண்ணாவிரதப், மெழுகுவர்த்தி ஏந்துதல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தி வருகிறது. ஆனாலும், அரசு இவர்களது போராட்டத்திற்கு செவி சாய்க்கவே இல்லை.
220 ரன்களை இலக்காக நிர்ணயித்த CSK…, ருதுராஜ் மற்றும் கான்வே அரைசதம் விளாசல்!!
இதையடுத்து, வரும் மே 27ம் தேதி இந்த இயக்கம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான “புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து” செய்தலே அமல் படுத்திய அடுத்த நிமிடமே CPS ஒழிப்பு இயக்கத்தை கலைத்து விடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.