தமிழ்நாட்டில் 2023-24 ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் மின்னணு முறையில் தாக்கல் செய்தார். இதில் தமிழனின் வீரம், கலை, கட்டிடம் உள்ளிட்ட அனைத்து திறன்களையும் கடல் கடந்து உலகிற்கு பறைசாற்றிய சோழர்களை சிறப்பிக்கும் விதமாக தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் ஏற்படுத்த உள்ளதாக முதல் அறிவிப்பை வெளியிட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியாக நலத்திட்டங்களை அறிவித்த நிதி அமைச்சர் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்டு வரும் முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் பழைய அரசு அலுவலர் குடியிருப்புகளை ரூ.100 கோடி மதிப்பிலான புதுப்பிப்பதற்கான பணி படிப்படியாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அரசு ஊழியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிக்கை வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது என எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.., இத்தனை பேர் பயனடைவார்கள் .. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இதற்கு முக்கிய காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தும் அரசு ஊழியர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி முடிவடையாதது தான் என வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த முழு தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.