போட்றா வெடிய., அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு!!

0
போட்றா வெடிய., அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு!!
போட்றா வெடிய., அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு!!

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஹிமாச்சல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் :

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக, சமீபத்தில் ஹிமாச்சலில் பதவியேற்ற காங்கிரஸ் அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடந்த அமைச்சரவையில், ஏப்ரல் 1 முதல் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து பேசிய மாநில வருவாய் மற்றும் தோட்டக்கலை துறை அமைச்சர், பங்களிப்பு பென்சனின் கீழுள்ள 1.36 லட்சம் ஊழியர்களை தவிர, மற்ற அரசு பணி மற்றும் புதிதாக பணியில் சேரும் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என அறிவித்தார்.

தமிழக மக்களுக்கு ஷாக்., ஊழியர்களின் திடீர் விடுப்பு போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் அன்றாட பணிகள்!!

இதுபோக 2023-24 ஆம் நிதி ஆண்டில், இந்த திட்டத்துக்காக ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் இது நாள் வரை NPSக்காக செலுத்தி வந்த, 8000 கோடி டெபாசிட் தொகை மத்திய அரசிடம் இருந்து திரும்பப்பெறும் பணிகளும் தொடங்கும் என அறிவித்தார். இச்செய்தி ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here