எதிர்வரும் உலக கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
உலக கோப்பை:
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஐசிசி சார்பாக 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்குபெற உள்ள இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மீதமுள்ள 2 இடங்களை பிடிப்பதற்காக, வரும் ஜூன், ஜூலை மாதங்களில், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நேபாளம், ஓமன், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 9 அணிகள் தகுதிச்சுற்றில் போட்டி போட உள்ளன. இதன் பிறகு தொடங்கப்பட இருக்கும், இந்த உலக கோப்பை அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இருக்க கூடும். இதில், இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உலக கோப்பைக்கான முழு அட்டவணையும் விரைவில் ஐசிசி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.