இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடர், நடைபெற இருக்கும் தேதி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ஒருநாள் உலக கோப்பை
இந்தியாவில், நடப்பு வருடம் அக்டோபர் மாதத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக தான் சர்வதேச அணிகள் அனைத்தும் தங்களது அணியை தயார்படுத்தும் வகையிலேயே, தற்போது ஒருநாள் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. 13 அணிகள் இந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் நேரடியாக பங்கு பெறுவதற்கு போட்டியிட்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும். தற்போது வரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 அணிகள் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்காக, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த உலக கோப்பை நடைபெற உள்ள தேதி குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்த உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த உலக கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.