சர்வதேச ஒருநாள் அரங்கில், பதிவாகி உள்ள பத்து இரட்டை சதத்தில், 7 சதங்கள் இந்திய வீரர்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.
இரட்டை சதம்:
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதத்தை அடித்து அசத்தினார். இதன் மூலம், சர்வதேச அளவிலான, ஒருநாள் அரங்கில் 10 இரட்டை சதம் பதிவாகி உள்ளது. இதில், 7 இடத்தை இந்திய வீரர்களை பிடித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, ரோஹித் சர்மா ஒருநாள் அரங்கில் (264, 209, 208*) மூன்று முறை இரட்டை சதத்தை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, சேவாக் (219), சச்சின் (200), இஷான் கிஷன் (210) இந்திய வீரர்களை தொடர்ந்து சுப்மன் கில்லும் (208) இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இதில், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் (237*), வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் (215) மற்றும் பாகிஸ்தானின் பகார் ஜமான் (210*) இரட்டை சதம் அடித்த 10 வீரர்களில் உள்ளனர்.
சச்சினையே பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்…, ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி அபாரம்!!
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு பேட்டிங் செய்த முறை குறித்து சுப்மன் கில் சில கருத்துக்களை கூறியுள்ளார். இவர் கூறியதாவது, பந்து வீச்சாளர்கள் மேலே வீசும் போது, டாட் பால்களை தவிர்க்க வேண்டும். ஆனால், கிடைக்கிற இடைவெளியில், நமது நோக்கத்தை பயன்படுத்தி, அடித்து விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.