அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாதம் வெளியான நிலையில், இதன் மூலம் 10,117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசுத் துறைகளிலும் 3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டே அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 1000 ஆயிரம் பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை.
அந்த 2 ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது உள்ள நிலவரப்படி பார்த்தால் அரசுத்துறைகளில் 4.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் வேலை பளுவை சமாளிக்க அரசு தொகுப்பூதியத்தில் ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த அவல நிலையை போக்க தமிழக அரசு TNPS குரூப் 1, 2, 2A, 4 ஆகியவற்றின் கீழ் ஆண்டுக்கு 15,000 காலிப்பணியிடங்களை அறிவிக்க வேண்டும். மேலும் போட்டித் தேர்வுகளை நடத்தி, உடனடியாக முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தவும் தி.மு.க. அரசை வலியுறுத்தல். pic.twitter.com/F6K3AicZzW
— O Panneerselvam (@OfficeOfOPS) May 31, 2023