14-வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: களிமண் தரை மன்னனான நடாலை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!!!

0

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், ரபேல் நடாலை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

2021 ஆம் ஆண்டுக்கான 14-வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செரிபியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபேல் நடால் உடன் மோதினார். 4 மணி நேரம் சென்ற இந்த ஆட்டம் நடைபெற்றது.இதில் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட்களில் வீழ்த்தி நடாலை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

 

அதேபோல் ஜூன் 10 அன்று நடந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டமொன்றில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா மற்றும் சுலொவேனியா வீராங்கனை தமரா ஜிடன்செக் ஆகியோர் விளையாடினர்.ஒரு கட்டத்தில், 5-5 என்ற செட் கணக்கில் போட்டி ‘டை’ ஆகி இருந்தது. பின்னர் முதல் செட்டை 7-5 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனை கைப்பற்றினார்.  பின்னர் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

2016-ல் ஜோகோவிச் தான் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆனார். 2015 தொடரில் களிமண் தரை மன்னனான நடாலை இதே ஜோகோவிச் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்த 14-வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் நடாலை விழித்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here