டிரம்ப் வருகையால் குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி – இன்னும் என்னென்ன நடக்குமோ..?

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருவதையொட்டி சேரி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை காலி செய்யுமாறு நகராட்சி 45 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

‘நமஸ்தே டிரம்ப்’ சிறப்பு நிகழ்ச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் வரும் பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக இந்தியா வருகின்றனர். அவர்களின் வருகையை ஒட்டி பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் ஆமதாபாத்தில் பங்கேற்க உள்ள ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக 100 கோடி செலவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 மணிநேர நிகழ்ச்சிக்காக ரூ. 100 கோடி செலவு செய்யும் இந்திய அரசு..!

அதன் முன்னேற்பாடாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள சேரியில் வசிக்கும் 45 குடும்பங்கள் டிரம்ப் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பே காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனால் அந்த குடும்பங்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். டிரம்ப் இரண்டு நாள் வருகைக்காக இந்திய அரசு இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here