தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணிநிரவல், பணியிட மாறுதல் உள்ளிட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களின் அடுத்த 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி நாளை முதல் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மே 25ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களின் பணிநிரவல் கலந்தாய்வும், மே 26ஆம் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதோடு ஒன்றியத்துக்குள்ளான இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு மே 29 ஆம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டள்ளனர்.
என்னது., திரைபிரபலங்களை கதிகலங்க விடும் பயில்வானுக்கு இந்த நிலைமையா? வைரலாகும் செய்தி!!
இந்த அறிவிப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.