தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் தினங்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் ஜல்லிக்கட்டு, எருது தழுவுதல் போன்ற போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியினால் போட்டியாளர்களிடேயே சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு, எருது தழுவுதல் போட்டிக்கு எந்தவித தடை விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதிவிட்ட மர்ம நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.