தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!!
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த நிலையில், தற்போது சில முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படுவதால் அடுத்த நான்கு நாளைக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 4 நாளைக்கு தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி, தேனி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பேருந்து ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை., இந்த மட்டும் செஞ்சிடாதீங்க? பொதுமக்கள் வரவேற்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here