புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் பற்றி தேவையற்ற வதந்தி பரப்பினால், 7 வருடம் ஜெயில் தண்டனை கன்பார்ம் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
அதிரடி முடிவு:
தமிழகத்தில் பணிபுரியும் பீகார், குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, தாக்குதல் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை, பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சோசியல் மீடியாவில் செய்தி வெளியாகியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை நம்பிய பலர், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ரயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். இதனால் பல ரயில் நிலையங்களில் இயல்புநிலை முடங்கியது. தற்போது இது குறித்து பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, புலம்பெயர் தொழிலாளிகள் குறித்து தேவையற்ற வதந்தி பரப்பினால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.
போட்றா வெடிய., அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு!!
இது போக, இந்த வதந்தி எதனால் பரப்பப்பட்டது என்பதை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். தற்போது இது சார்ந்த தீவிர பணிகளில் தமிழக போலீசார் இறங்கியுள்ளனர்.