தமிழகத்தில் தற்போது வேட்பு மனு பரிசீலினை நடைபெற்று வருகிறது. இதில் பலரது வேட்பு மனு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேட்பு மனு:
தமிழகத்தில் கடந்த 12ம் தேதியுடன் துவங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிருப்பதால் தமிழகத்தில் தேர்தல் களமே மிக பரபரப்பாக இருந்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு பரிசீலனையை துவக்கி நடத்தி வருகின்றனர். இதில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கமல், ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வேட்பு மனு சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வேட்பு மனு.
கெத்து காட்டிய ட்விட்டர் – வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கதறல்!!
மநீம வேட்பாளர் பத்மப்ரியா வேட்பு மனு, அதிமுகவின் இன்பத்துறை வேட்பு மனு, திமுகவின் அப்பாவு வேட்புமனு ஆகியோரின் வேட்பு மனுவில் பல சர்ச்சைகள் மற்றும் நம்பக தன்மை இல்லாத காரணத்தினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்களிலே இவ்வளவு குளறுபடி என்றால் தேர்தலில் என்னென்ன நடக்குமோ என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.