தமிழகத்தில் ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

1
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கமளித்து உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.1 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் ஆறுதல் அளிக்கும் தகவலாக உயிரிழப்புகள் விகிதம் குறைவாகவும், குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் உரையாற்றினார்.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது – அமைச்சர் ஜேசி மதுசாமி..!

chennai lock down
chennai lock down

உள்ளூர்வாசிகளுக்கே 75% தனியார் வேலைவாய்ப்புகள் – ஹரியானா அமைச்சரவை ஒப்புதல்!!

அதில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என முதல்வர் தெரிவித்து உள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா மேலும் பரவாமல் தடுக்க முடியும். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களிடம் பரிசோதனை செய்யப்படுவதாக கூறிய முதல்வர், தமிழகத்தில் ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here