தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 9.40 லட்சம் பேரில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 27ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் வருகிற 2024 ம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்காது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். 1 முதல் 9ம் வகுப்புகளை போல் பள்ளி அளவில் மட்டுமே 10ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும். முன்னதாக SEBA மற்றும் AHSEC கவுன்சில்கள் நடத்தி வந்த 10, 12ம் வகுப்பு தேர்வுகளை, இனி ஒரே கவுன்சில் மேற்கொள்ளும் படி புதிய கல்வி வாரியம் அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய கோப்பை 2023.., பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை போடும் பிற அணிகள்.., வெளியான முக்கிய தகவல்!!!!
மேலும் வழக்கம் போல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 10ம் தேர்ச்சி மதிப்பெண்களை பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளார். இந்த திட்டம் தேசிய கல்வி கொள்கை 2020 அமலாக்கத்துடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.