ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணத்தால் விலகி உள்ளதால், புது கேப்டனை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், பும்ராவை போல முதுகு வலியால் அவதிப்பட்டு, வருகிறார். இதனால், தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும், விலகி ஸ்ரேயாஸ் ஐயர் ஓய்வு எடுத்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கிடையில், இவரை பரிசோதித்த பிசிசிஐயின் மருத்துவ குழு, பும்ராவை போல இவருக்கும் அறுவை சிகிச்சை செய்தால் தான் முதுகு வலி சரியாகும் என கூறப்பட்டது. இதனால், இவர் ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளிட்டவை இழப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.
விவகாரத்திற்கு பிறகு டேட்டிங்கா.., சம்முவே வெளியிட்ட அதிரடி பதிவு.., வாயடைச்சு போன ரசிகர்கள்!!
இதன் விளைவால், ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ள இவருக்குத் தகுந்த மாற்று கேப்டனை அணி நிர்வாகம் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்துள்ளது. டேவிட் வார்னர் சமீபத்தில் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.