பல வருடங்களாக நடிகை நித்யா மேனனை லவ் டார்ச்சர் செய்யும் மர்ம நபர் – பரபரப்பு புகார்!!

0
பல வருடங்களாக நடிகை நித்யா மேனனை லவ் டார்ச்சர் செய்யும் மர்ம நபர் - பரபரப்பு புகார்!!

முன்னணி நடிகையான நித்யா மேனனுக்கு வாலிபர் ஒருவர் கடந்த 6 வருடங்களாக காதல் தொந்தரவு செய்வதாகவும், இவரால் 30க்கும் மேற்பட்ட மொபைல் எண்ணை பிளாக் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை குற்றச்சாட்டு:

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் தமிழில், வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தளபதியுடன் மெர்சல் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது, தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில், நித்யா மேனனுக்கு  விரைவில் திருமணம் என தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள நடிகை, இது குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர்  தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி  கடந்த 6 ஆண்டுகளாக லவ் டார்ச்சர் செய்வதாகவும், தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

கிட்டத்தட்ட, 30 க்கும் மேற்பட்ட மொபைல் எண்களை அவரால் தான் பிளாக் செய்துள்ளதாக குறிப்பிட்டார். பிரபல நடிகையின், இந்த பரபரப்பு குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here