ஒன்றிய அரசின் தேசிய குத்தகை திட்டத்தின்படி அரசிடம் இருக்கும் சொத்து சில தனியாருக்கு குத்தகைக்கு விட திட்டம். இதன் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய் வரும் அப்படின்ற திட்டத்துல இந்த முடிவ எடுத்து இருக்காங்க. ஒன்றிய அரசின் சொத்துக்கள் சில வகைப்படுத்தப்பட்டு சாலை, விமான நிலையம், நெடுஞ்சாலை, துறைமுகம் போன்ற சொத்துக்களை தனியாரிடம் விட திட்டம் இருக்கதா தகவல் வந்திருக்கு. 6 விமான நிலையம் அதாவது சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு திட்டமிட்டு இருக்காங்க.
நிர்மலா சீதாராமன் எதுலாம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்போறாங்கனு இந்த வீடியோல பாருங்க…
இது மட்டுமில்லாம நீலகிரி மலை ரயில் பாதையும் இந்த திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விட போறதா சொல்லி இருக்காங்க. 491 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தோட சில சொத்துக்களும், இதையெல்லாம் குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்ட போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சொல்லியிருக்காங்க ஒன்றிய அரசின் சொத்துல 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை குத்தகைக்கு விட போறதா சொல்லி இருக்காங்க, இந்த திட்டத்தின் நோக்கம் நிதி திரட்டுவது அப்படினு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்காங்கபா….
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்