‘மக்கள் நலனை சிந்திக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும் தான்’ – நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்!!

0

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஒட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதே போல் பிரச்சார உரையில் காங்கிரஸ் கட்சி தங்களது குடும்ப நலனிற்காக மாநிலங்களின் நலன்களை கவனிக்க தவறிவிட்டது என்றும் விளாசி உள்ளார்.

புதுச்சேரியில் தேர்தல்

வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை என்று அனைத்தினையும் வெளியிட்டு வருகின்றது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பாஜக சார்பில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் இந்த கூட்டத்தில் அவர் பாஜ கட்சியின் தேர்தல் அறிக்கையினையும் வெளியிட்டுள்ளார்.

விஜய், சூர்யா பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

மக்களை கவரும் வண்ணம் பல வித கவர்ச்சிகரமான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுவதாக அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் நடந்த குளறுபிடிகளை அவர் தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தனது உரையில் “பிரதமர் மோடி வழங்கும் திட்டம் மக்களுக்கு பயன் தந்து விடுமோ என்று காரணத்திற்காக தான் புதுச்சேரி முதல்வராக இருந்த நாராயணசாமி மாநிலத்திற்கு என்று எந்த வித நிதியையும் இன்று வரை கேட்கவில்லை. அதே போல் காங்கிரஸ் கட்சி தங்களது குடும்ப நலனை பற்றி சிந்தித்ததால் தான் மாநிலங்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரி மக்களுக்கு கிடைக்காமல் தடுத்தவர் நாராயணசாமி. நாட்டு மக்களின் நலனை சிந்திக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here