புதுவையில் முதல்வராக திகழ்ந்த நாராயணசாமி மாநிலம் மீது எந்த அக்கறையும் இல்லை மேலும் அவர் மோடிக்கு நன்பெயர் கிடைக்க கூடாது என்று செயலெட்டர் என்று நிர்மலா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை:
புதுவையில் கடந்த சில நாட்களாக பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியது. புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுவையில் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அங்கு வாக்கெடுப்பின் அடிப்படையில் குறைந்த ஆதரவு பெற்றதால் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அங்கு ஆளும் கட்சியின் எம்எல்ஏ சிலர் தங்களது பதிவியை ராஜினாமா செய்தனர். இதுவே பல பிரச்சனைகளுக்கு துவக்கமாக இருந்தது. இதன்பின்பு நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரை சந்தித்து வழங்கினார். தற்போது புதுவையில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு தேர்தல் களமே பரபரப்பாக இருந்து வருகிறது.
சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!
தற்போது முன்னால் முதலமைச்சர் நாராயணசாமி குறித்து நிர்மலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நாராயணசாமிக்கு மாநிலம் மீது அக்கறை இல்லை. மோடிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் அவர் புதுவை நலனை பற்றி சிந்திக்கவில்லை. மேலும் அவர் புதுவை வளர்ச்சிக்காக எந்த நிதியும் மத்திய அரசிடம் கேட்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.