தமிழ் சினிமாவில் GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற படத்தில் பேயாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நிக்கி கல்ராணி சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஆதி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இருக்கையில் நிக்கி கல்ராணி தனது மாமனார் மாமியாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு இவ்வளவு அழகான மாமியார் இருக்காங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.