தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, இரவு நேர பொது முடக்கம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும், இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு நேரத்தில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாவும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்