தினம் தினம் என்ன குழம்பு வைப்பது என்ற குழப்பம் நம்மில் அனைவர் மத்தியில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. மேலும் சரியான காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் அதற்கு மேல் பெரிய தலைவலி. இந்த பிரச்சனைகளை களையவே ஈஸியான காய்கறிகள் எதுவும் தேவைப்படாத ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதை காண்போம். அதாவது இந்த பதிவில் நாகர்கோவில் புளிக்கறி எவ்வாறு செய்வது என காணலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 1 கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மிளகு – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 3
புளி தண்ணீர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
தேங்காய் துருவல், ஒரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து கொள்ளவும். அதன் பின்னர் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கொள்ளவும், அதில் புளி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
மேலும் அதனுடன் சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொண்டு நன்கு கொதிக்கவிடவும். அதன் பிறகு குழம்பு பொங்கி வரும் வேளையில் அடுப்பை அனைத்து கொள்ளவும். தற்போது சுவையான ஈஸியான நாகர்கோவில் புளிக்கறி தயார்.
குறிப்பு : இதில் தேவைப்பட்டால் புளி தண்ணீர் விட்டு வேக வைத்த வெள்ளரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், தடியங்காய், மாங்காய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்