விநாயகர் சதுர்த்தி, தீபாவளின்னு பண்டிகையா வருது.. புதுசா என்ன பலகாரம் செய்றதுன்னு தெரியலையா? அப்போ இந்த  பேமஸ் முந்திரி கொத்து செஞ்சு அசத்துங்க!!!

0

நாகர்கோவில்லில் பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய பலகாரம் முந்திரி கொத்து. இந்த பலகாரம் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அதிக அளவில் உடலுக்கு வலு சேர்க்க கூடியது. அப்படிப்பட்ட பலகாரமான முந்திரி கொத்து எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான  பொருட்கள்

பச்சை பயறு – 1 கப்

சர்க்கரை – 3/4 கப்

தேங்காய் துருவல் – 1/2 கப்

 ஏலக்காய் – 4

அரிசி மாவு – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

எள் – 1 தேக்கரண்டி

தண்ணீர்  – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் பச்சை பயரை சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக மாறும் வரை வறுத்து கொள்ள வேண்டும். அது ஆறிய பிறகு அதனுடன் ஏலக்காய் சேர்த்து நெறுநெறுவென  அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய்  லைட்டாக சிவந்ததும் அதில் எள் சேர்த்து வதக்க வேண்டும். இந்த கலவையை  பச்சை பயிறு அரைத்த கலவையுடன் சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு வேறு ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்த பிறகு, இந்த பாகை அந்த கலவையுடன் சேர்த்து கொண்டு உடனே அதை சிறு சிறு உருண்டையாக பிடித்து கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு ஆறுவதற்கு முன்பு உருண்டைகளை செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த உருண்டைகளை அப்படியே 20 நிமிடம் வரை காயவைக்க வேண்டும். அதன் பின்னர் அரிசி மாவு, மஞ்சள், சிறிதளவு மற்றும்  தண்ணீர் சேர்த்து ஓரளவுக்கு கெட்டி பதத்தில் கலந்து கொள்ளவும். அதன் பின்னர், பிடித்து வைத்த உருண்டைகளை அதில் முக்கி இரண்டு அல்லது மூன்று உருண்டைகளை சேர்த்து எண்ணெயில் போட்டு  பொரித்து கொள்ளவும். தற்போது சுவையான முந்திரி கொத்து தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here