எப்போதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அனைவருக்கும் போர் அடித்துவிடும். மேலும் வித விதமான உணவு வகைகளையே அனைவரும் விரும்புவர். அதுவும் சைவ பிரியர்கள் காய்கறிகளில் விதவிதமான உணவு வகைகள் செய்வது என்பது அரிது. இந்நிலையில் அவர்களுக்காகவே வாழைக்காய் மற்றும் சேனைக்காய் வைத்து வித்தியாசமான ஒரு உணவு வகையை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அந்த வகையில் தற்போது நாகர்கோவில் எரிசேரி எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1
சேனைக்காய் -1/2
மிளகு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 கப்
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைக்காய் மற்றும் சேனைக்காய்யை கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் மற்றும் மிளகு தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். அதன் பின்னர் முக்கால் கப் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதன் பிறகு நன்கு வெந்து வந்த சேனை மற்றும் வாழைக்காயில், அரைத்த விழுதுகளை சேர்த்து கொண்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். தேங்காய் கலவை மற்றும் காய்கள் ஒன்றோடு ஒன்று நன்கு சேருமாறு வரும் வரையில் கொதிக்க விட வேண்டும்.
பிறகு, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்த பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை சேர்த்து கொண்டு சிவக்க வறுக்க வேண்டும். வறுத்தெடுத்த இந்த தாளிப்பு கலவையை குழம்பு உடன் சேர்த்து கொள்ளவும். பிறகு நன்றாக கிளறி கொண்டு அடுப்பை அணைத்து விடவும். தற்போது சுவையான நாகர்கோவில் வாழைக்காய் எரிசேரி தயார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்