தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உச்சம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் சில முக்கிய பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வராமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் வெப்பத்தின் சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே இருக்கும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை , திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.