தற்போதைய சூழ்நிலையில் கோடைகால வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், மக்கள் வெளிய வரவே பயப்படுகிறார்கள். மோச்சா புயல் சமீபத்தில் கடந்து சென்றதால் காற்று கூட வீசாத சூழ்நிலை ஏற்பட்டது. இப்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் அவர்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே இருக்கும் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.