கடலூரில் 12ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை முயற்சி – போலீசார் தீவிர விசாரணை!!

0

தமிழகத்தில் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு மாணவன் மற்றும் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் தற்கொலைகள்:

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் 12ம் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியமனுர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 12ம் வகுப்பு ஸ்ரீமதி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? அமைச்சர் விளக்கம்!!

இதனை தொடர்ந்து திருவள்ளுவர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியான திரு இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இக்கட்டான சூழ்நிலை மாறாமல் இருக்கும் நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாணவன் மற்றும் மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவன் மற்றும் மாணவி எறும்பு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அதை அறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து அவர்களை அருகில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது குறித்து பல பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here