அடுத்த 3 நாட்களுக்கு இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …! வானிலை ஆய்வு மையம் தகவல் !!!

0

கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சில நாட்களாக வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக  மழை பெய்து வருகிறது. அதாவது  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள  மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அதாவது, இன்று மற்றும் நாளையும் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

மேலும்  3 நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற பிற மாவட்டங்கள்  மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here