தமிழகத்தில் அவ்வபோது பரவலாக சில இடங்களில் மழை பொழிந்து வருகிறது. இருப்பினும் கடந்த நாட்களாக வெயிலின் தாக்கமே அதிகரித்து உள்ளது. தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை
ஒரு சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து மக்களுக்கு வெப்பத்தை தணித்து குளுமையை தந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களில் வெயில் சுட்டெரித்து கொண்டு இருந்தது. இதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை தெரிவித்து உள்ளது.
அதாவது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர்,கடலூர், தேனி, திண்டுக்கல்,தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடி,மின்னல் உடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது.
மேலும் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களில் கனமழையும், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.