சாம்பியாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தி நேரலையின் போது செய்தி வாசிப்பாளர் தனக்கும், சக பணியாளர்களுக்கும் தொலைக்காட்சி நிர்வாகம் இதுவரை சம்பளம் தரவில்லை என கூறிய சம்பவம் அந்த நேரலையை பார்த்துக்கொண்டிருந்த நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடான சாம்பியாவில் இயங்கி வரும் KBN டிவி எனும் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிபவர் கபின்டா கலிமினா. இவர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருக்கும்போது அனைவரும் எதிர்பாக்காத ஒன்றை செய்துள்ளார். அதாவது, அந்த செய்தி வாசிப்பின் போது கபின்டா கலிமினா கூறியதாவது, “நாங்களும் மனிதர்கள் தான். ஆனால் நிர்வாகம் எனக்கும் சக பணியாளர்களுக்கும் இதுவரை சம்பளம் தரவில்லை. எங்களுக்கு எங்களுடைய சம்பளம் வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவர் இவ்வாறு கூறியதும் உடனே அந்த நேரலை நிறுத்தப்பட்டது. இதை பார்த்த அனைத்து நேயர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து அந்த தொலைக்காட்சி நிர்வாகம், அந்த செய்தி வாசிப்பாளர் குடித்து விட்டு உளறியதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்