தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பொங்கல் திருநாள் நேற்று கொண்டாடி முடிந்ததை தொடர்ந்து இன்று தமிழ் மக்களின் பாரம்பரிய விழாவான ”மஞ்சு விரட்டுதல்”, ”ஏர் தழுவுதல்” என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
ரஞ்சிதமே பாடல் செய்த நெகிழவைத்த சம்பவம்.., கலக்கத்துடன் தமன் வெளியிட்ட வீடியோ!!
இந்த ஜல்லிக்கட்டு விழா தற்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வெகு விமர்சியாக ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மஞ்சு விரட்டுக்கு பெயர் பெற்ற மதுரை பாலமேட்டில் இன்று 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியுள்ளது.
மேலும் இவ்விழா 150 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகளுடன் இப்போட்டி தொடங்கிய நிலையில் தற்போது இதன் முதல் சுற்று முடிவு பெற்றுள்ளது. இதில் 3 மாடுபிடி வீரர்களும், மற்றும் காளையின் உரிமையாளர், காவல் ஆய்வாளர் ஒருவர் மொத்தம் 6 பேர் இதில் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.