இந்திய அணிக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் இந்த ஒரு மாற்றம் வித்தியாசமாக இருந்தது என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.
மிட்செல் சான்ட்னர்:
இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், ஒரு நாள் தொடரை முழுவதுமாக இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. இதையடுத்து விளையாடப்பட்ட டி20 தொடரின் முதல் போட்டியை நியூசிலாந்து அணி வென்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து, 2வது போட்டியில், பேட்டிங்கில் சொதப்பிய நியூசிலாந்து அணி, 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இலக்கினை துரத்திய இந்திய அணியையும் நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். ஆனாலும், கடைசி நேரத்தில், இந்திய அணி 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் சில வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உலகை வென்ற இந்திய படை…, வெற்றியை கொண்டாட பிசிசிஐ அழைப்பு!!
அவர் கூறியதாவது, இந்த போட்டியில், எங்களது பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். பேட்டிங்கில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், நாங்கள் வெற்றி பெற்று இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், இந்த போட்டியில், 15 வது ஓவருக்கு மேல், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தோம். இந்த மாற்றம் வித்தியாசமாக இருந்தது என்று மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.