அரசு வழங்கும் வேளாண் திட்டங்கள் சரியான முறையில் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
வேளாண் திட்டம்
மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த திட்டங்கள் வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்படுவதால் சரியான பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை சரி செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் இணைய சேவை ஒன்றை தொடங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இணையதளத்தில் வேளாண் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் இணைத்துள்ளனர்.
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!
இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் சரியான முறையில் சென்றடையும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். மேலும் கிரைன்ஸ் இணையத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை, தொலைபேசி எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரம், நில விவரங்கள் போன்ற தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம் என கூறியுள்ளனர்.