மத்திய அரசு அடுத்த மாதத்தில் இருந்து அதாவது அக்டோபர் முதல் புதிய ஊதிய விதிகளை (Wage Code) அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
அதன் படி இந்த புதிய விதியின் கீழ் பணியாளர்கள் பணிபுரியும் கால நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ளது போல ஒரு வாரத்தில் 48 மணி நேரம் ஒரு ஊழியர் வேலை செய்தால் போதும். அதாவது இந்த புதிய விதிப்படி வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக 240 நாட்கள் வரை முன்பு விடுப்பு எடுக்கமுடியும். தற்போது இது 300 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
ஏற்கனவே இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருந்தது. இருப்பினும் மாநில அரசுகளிடமிருந்து வரைவு விதிகள் பெறப்படாததால், அது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் புதிய ஊதிய விதிகள் அமலுக்குக் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்