நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிதாக வைரஸ் தொற்று பரவியதையடுத்து மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஃபுளூ வைரஸ்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வருவதால் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் மூடுபனியால் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஊட்டியில் திடீரென்று சளி, இருமல், காய்ச்சல், கை கால் வலி போன்ற அறிகுறிகளைக் கொண்ட புதிய தொற்று பரவி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி மருத்துவர்கள் கூறுகையில், பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற வைரஸ் பரவி வருகிறது.
அடுத்த 3 நாட்களில் தமிழகத்தின் வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளை பார்க்கும் போது ஃபுளூ நோயின் அறிகுறிகளாக தெரிகிறது. இதனால் கூடிய விரைவில் இந்த நோய்க்கான தடுப்பு மருந்து தயாராகிவிடும் என்று கூறியுள்ளனர்.